தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எல்லை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?' - பிரியங்கா காந்தி - பாஜக அரசு மவுனம்

டெல்லி: சீனத் தாக்குதல் குறித்து எதுவும் பேசாமல் பிரதமர் மோடி ஏன் மௌனமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Priyanka
Priyanka

By

Published : Jun 18, 2020, 5:25 AM IST

கிழக்கு லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கடுமையான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசு மௌனம் சாதித்ததைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில், நமது வீரர்கள் கொல்லப்பட்டதிற்கு ஆளும் பாஜக அரசு மௌனம் காப்பது ஏன்? இந்தியா உண்மைக்குத் தகுதியான ஒரு நாடு. அதன் நிலத்தின் மீது உரிமை கொண்டாடுவதற்கு முன்பு, அதனை முறியடிக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் தலைமைக்குத் தகுதியான நாடு இந்தியா. நாம் சீனாவிற்கு எதிராக நிற்க வேண்டிய நேரம் இது” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "ஏன் பிரதமர் அமைதியாக இருக்கிறார்? எதை அவர் மறைக்கிறார்? எங்களுக்கு நடத்த தாக்குதல் குறித்து உண்மை நிலை தெரிய வேண்டும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:'அமைதியின் மொழி புரியவில்லை என்றால், உணரும் வகையில் இந்தியா பதிலடி கொடுக்கும்'

ABOUT THE AUTHOR

...view details