இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், "நிதிஷ்குமார் தனது 15 ஆண்டுகள ஆட்சியில் மாநிலத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்களை அழித்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்கிறார். இரண்டு தலைமுறைகளின் எதிர்காலத்தையும் அவர் பாழ்படுத்திவிட்டார். வேலையின்மை, வேலைவாய்ப்புத் தொழில்கள், முதலீடு மற்றும் இடம்பெயர்வு குறித்து அவர் எதுவும் பேசாததற்கு இதுவே காரணம். இந்த விஷயங்களில் ஏன் அவர் பேசாமல் இருக்கிறார்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் பாணியை பின்பற்றி, முதலமைச்சர் நிதிஷ் குமார் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார் என்று விமர்சித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் , மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் மக்களை பாதிக்கும் ஊழல் போன்ற உண்மையான பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் பேச மாட்டார் என தெரிவித்துள்ளார்.