தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தந்தையின் மறுமண முடிவால் சுஷாந்த் இறந்திருப்பார்- சஞ்சய் ராவத்

மும்பை: தந்தையின் மறுமணம் குறித்த முடிவாலே நடிகர் சுஷாந்த் சிங் இறந்திருக்கக்கூடும் எனவும், பாஜக தேவையில்லாமல் இந்த வழக்கில் அரசியல் செய்துவருவதாகவும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 9, 2020, 6:36 PM IST

shiv-senas-sanjay-raut-claims-sushant-singh-rajpu-was-upset-by-fathers-decision-to-remarry
shiv-senas-sanjay-raut-claims-sushant-singh-rajpu-was-upset-by-fathers-decision-to-remarry

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை மற்றும் பிகார் காவலர்களுக்கு இடையே மோதல் நீடித்துவரும் நிலையில், மகாராஷ்டிர ஆளும் கட்சியான சிவசேனாவின் எம்பியும், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் இந்த வழக்குத் தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்கிறார்.

மகாராஷ்டிர எதிர்க்கட்சியான பாஜக, தனது ஆதரவு தொலைக்காட்சிகளுடன் இணைந்து. நடிகர் சுஷாந்த் சிங் மறைவிற்கும், சிவசேனாவிற்கும் தொடர்புடையதாக கருத்துகளை வெளியிட்டுவருகிறது.

அதுமட்டுமின்றி, ஒரு மாநில முதலமைச்சர் மீது அநாகரீகமான கருத்துகளை முன்வைக்கிறது. இதுபோன்ற கருத்துகள் கட்சித் தலைவர்கள் பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பல நடிகர்களுடன் நல்ல நட்புறவைக் கொண்டுள்ளார். இதற்காக அவரை, நடிகர்கள் இறப்பு வழக்குடன் தொடர்புபடுத்துவது நியாயமற்றது.

மேலும், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் அவரது தந்தை மறுமணம் செய்துகொள்வதாக எழுதிய கடிதத்தை எண்ணி மிகுந்த மனவேதனை கொண்டிருந்தார். அவர் உயிரிழந்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். மேலும், சுஷாந்திற்கும் அவரது தந்தைக்கும் நல்ல உறவுமுறை இருந்ததில்லை. இதனை திசைத் திருப்பவே, அவரது தந்தை மரண வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், பிகார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த வழக்கை விசாரிக்கும் பிகார் காவல்துறைத் தலைவர் குப்தேஷ்வர் பாண்டே, 2009ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக போட்டியிட தனது வேலையிலிருந்து விலக முடிவு செய்தார்.

அப்போது, பாண்டே மனநிலை சீராக இல்லாதவர் என அவரது மனைவி கருத்து தெரிவித்திருந்தார். மனநிலை சீராக இல்லாத ஒருவரை பணிக்கு அமர்த்தியது குறித்து அம்மாநில அரசு பதிலளிக்கவேண்டும். இவர் தற்போது பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு நெருங்கியவராக வலம்வருவதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

சுஷாந்த் சிங், தன்னுடைய வாழ்வில் பல துயரங்களை சந்தித்தபோது உடனில்லா பலர் தற்போது அரசியல் ஆதாயங்களுக்காக மற்றவர் மீது பழி சுமத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details