அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 'எ ப்ராமிஸ்ட் லேண்ட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், மற்றவர்களை ஈர்க்க ஆர்வம் காட்டும் ராகுல் காந்திக்கு, ஒரு விவகாரத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாட்டமோ பக்குவமோ இல்லை என ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்துவருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து விமர்சன கருத்து தெரிவித்துள்ள ஒபாமாவுக்கு இந்தியா குறித்த புரிதல் உள்ளதா என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய தலைவர்கள் குறித்து வெளிநாட்டு அரசியல்வாதிகள் இம்மாதிரியான கருத்து தெரிவிக்கக் கூடாது.