டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவர் இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல்காந்தி:
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். காங்கிரஸ் கட்சியின் மகளான அவருக்கும், எனக்கும் தனிப்பட்ட அளவில் நெருக்கமான உறவு இருந்தது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், டெல்லி மக்களுக்கும் வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.