தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2019, 1:20 PM IST

ETV Bharat / bharat

'பாஜகவில் வலுக்கட்டாயமாக இணைக்கப்படுகிறார்கள்' - சரத் பவார் தாக்கு

மும்பை: மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களை பாஜக வலுகட்டாயமாக தன் கட்சியில் இணைத்துக்கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

சரத் பவார்

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவில் இணைந்து-வருகின்றனர். இது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே மகாராஷ்டிராவில் உள்ள 240 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற கட்சிகளுடனும் பேசிவருகிறோம். அடுத்த 8-10 நாட்களில் கூட்டணியின் விவரம் முழுமையாக தெரிந்துவிடும். மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை பாஜக வலுகட்டாயமாக தன் கட்சியில் இணைத்துவருகிறது. இச்செயலை அக்கட்சி நாடு முழுவதும், செய்துவருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details