இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா, கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் டிஎஸ்பி விக்ரம் தலைமையில் கடந்த 12ஆம் தேதி ஐஎஸ் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் உக்கடம் முகமது அசாருதீன்(32), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா(38), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர்(29), போத்தனூர் உமர் நகரை சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா(28) ஆகிய 6 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.