தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல: குடும்ப உறுப்பினர்கள் தகவல் - ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு

டெல்லி: ஷாகீன் பாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Shaheen Bagh shooter Kapil Gujjar's family denies 'AAP links' Shaheen Bagh shoot Kapil Gujjar, Aam Aadmi Party, Shaheen Bagh Citizenship Amendment Act, Dallupura Chief Metropolitan Magistrate ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல: குடும்ப உறுப்பினர்கள் தகவல் ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2020, ஆம் ஆத்மி, பாஜக, பகுஜன் சமாஜ், கபில் குஜ்ஜார்
Shaheen Bagh shooter Kapil Gujjar's family denies 'AAP links'

By

Published : Feb 5, 2020, 1:33 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்த இளைஞரை காவலர்கள் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் கபில் குஜ்ஜார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என தகவல் பரவியது.

இது அம்மாநில அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கபில் குஜ்ஜாரின் உறவினர்கள், கபிலுக்கு ஆம் ஆத்மியுடன் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள், “எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இல்லை. இந்த விவகாரத்தில் கபில் குறிவைக்கப்படுகிறார். பாரதிய ஜனதா எப்படியாவது தேர்தலில் வெற்றிப் பெறவேண்டும் என்று விரும்புகிறது. கபில் எந்தக் கட்சியுடனும் தொடர்பில் இல்லை.

ஷாகீன் பாக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல: குடும்ப உறுப்பினர்கள் தகவல்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் கடந்த 50 நாள்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவருகிறது. முன்னதாக கபில் குஜ்ஜார் குறித்து இருவேறு தகவல்கள் பரவியது.
அவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் என்றும் அக்கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்து விட்டார் என்றும் தகவல்கள் பரவின. டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: அஸாம் ஐஐடி பேராசிரியரிடம் என்ஐஏ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details