அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏழு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.