தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடக்கம்!

By

Published : May 27, 2020, 2:03 PM IST

திருவனந்தபுரம்: தகுந்த இடைவெளியுடன் கேரளாவில் தொழிற்கல்வி பிரிவுக்கான பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின.

கேரளாவில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடக்கம்!
கேரளாவில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடக்கம்!

நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத்தில் பல்வேறு தேர்வுகள் மே 30 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மே 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கேரள மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி, தொழிற்கல்வி தேர்வுகள் தொடங்கின.

தேர்வு மையங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கைகளைக் கழுவ சானிடைசர் வழங்கப்பட்டன. தேர்வு மையங்களுக்குச் செல்ல மாணாக்கர்களுக்கு வசதியாக வழிகாட்டுதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு விவரங்கள்

12ஆம் வகுப்புத் தேர்வுகள் மே 27 முதல் 30 வரையிலும், தொழிற்கல்வி பிரிவுக்கான தேர்வுகள் மே 26 முதல் 30 வரையிலும் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:டெல்லியில் ராணுவ உயர்மட்ட குழு முக்கிய ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details