தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2020, 1:13 PM IST

ETV Bharat / bharat

நாட்டில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாக உள்ளது - ப. சிதம்பரம்!

டெல்லி: இந்தியாவில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாகவே உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Secularism, citizenship under challenge in country: Chidambaram
Secularism, citizenship under challenge in country: Chidambaram

டெல்லியில் ஆஷிஷ் நாண்டி மற்றும் பேராசிரியர் ஆகாஷ் ராத்தோர் தொகுத்த "ஒரு தேசத்திற்கான பார்வை, வழி மற்றும் பார்வைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டர்.

அப்போது விழாவில் பேசிய ப. சிதம்பரம், “இந்த புத்தகம் ஒன்று சாதாரணமான புத்தகம் அல்ல. இதை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் பல அடிப்படைகளின் அவசியங்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்” என்றார்.

நாட்டில் மதச்சார்பின்மையும் குடியுரிமையும் சவாலாக உள்ளது -ப. சிதம்பரம்!

இதையும் படிங்க...நித்யானந்தா நீதிமன்ற பிணை ரத்து

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாகவே உள்ளது. நீங்கள் மதசார்பற்றவராக இருந்தால் உங்களை தேச விரோதி என்றழைப்பார்கள், உங்களின் தேசப்பற்று கேள்விக்கு உள்ளாகும்” எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details