பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது 2017ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலம், நிபந்தனைகளை தீர்மானிக்கும் அதிகாரங்களை அரசு கையகப்படுத்துகிறது என்பதே இச்சட்டம் மீதான குற்றச்சாட்டு.