தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை! - நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை கோரிய வழக்கில் டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

SC stays hanging of Nirbhaya convicts until further orders
SC stays hanging of Nirbhaya convicts until further orders

By

Published : Jan 31, 2020, 5:57 PM IST


2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் நாளை (பிப்ரவரி 1ஆம் தேதி) தண்டனையை நிறைவேற்றிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும், கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, குற்றவாளிகள் தரப்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வு, முறையான தீர்வு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...நிர்பயா குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details