உன்னாவ் வழக்கு பல திருப்பங்களை சந்தித்துவந்த நிலையில், இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் உத்தரப் பிரதேச சிபிஐ நீதிமன்றத்திலிருந்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக இடைக்கால இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரூ. 25 லட்சத்தை இடைக்கால இழப்பீடாக உத்தரப் பிரதேச அரசு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.