சிதம்பரத்திற்கு முன்பிணை! - சிதம்பரம்
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
![சிதம்பரத்திற்கு முன்பிணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4345543-thumbnail-3x2-chid.jpg)
PC
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் முன்பிணை கோரி சிதம்பரம் முறையிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முன்பிணை வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரம் சிக்கி சிபிஐ காவலில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.