உச்ச நீதிமன்ற பார் கிளார்க்ஸ் அசோசியேஷன் (எழுத்தர் சங்கம்) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், “குமாஸ்தாக்களுக்கு நிதிநிலை திரும்ப உதவுவதற்காக யூனியன் ஆஃப் இந்தியா, பார் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் ஆகியவைகளுக்கு வழிமுறைகளை வழங்கவேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “அரசின் பொதுமுடக்க அறிவிப்புதான், குமாஸ்தாக்களின் தற்போதைய துயரத்துக்கு காரணம். மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் காக்க வேண்டியது அரசின் கடமை.