பேச்சு சுதந்திரம், சமத்துவ உரிமை ஆகியவற்றை மீறும் வகையில் இந்திய அரசியலமைப்பில் உள்ள ‘நீதிமன்ற அவதூறு’ பிரிவின்படி அவமதிப்பைக் கையாளும் குற்றவியல் சட்ட விதிகளை நீக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி, மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே தொடுக்கலாம் என மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவானுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.