ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பிரசித்திப்பெற்ற ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக கரோனா பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஒடிசா விகாஷ் பரிசத் என்ற அமைப்பு ரத யாத்திரை நடத்த தடை கோரி மனு தாக்கல்செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமர்வு, கரோனா சூழலில் 10 ஆயிரம் பேர் கூடுவதே மிகவும் ஆபத்தானது. இதனால் இந்த ரத யாத்திரையை நிச்சயமாக அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரத யாத்திரையை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளனர்.