தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சிறைக் காவலில் உயரிழந்த சம்பவத்திற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தற்போது கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறையில் வைத்து காவலர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில்தான் இருவரும் மரணமடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல் சிறை மரணங்கள் குறித்து நாடு முழுவதும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற வணிகர்கள் காவல் துறையினரின் கொடூரமானத் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.