தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு! - உச்ச நீதிமன்றம்

கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Breaking News

By

Published : Oct 1, 2020, 9:49 PM IST

டெல்லி: மார்ச் 25 முதல் மே 24 வரையிலான பொதுமுடக்க காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான தொகையைத் திருப்பித் தரும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) முன்மொழிவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.

பணத்தைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக பிரவாசி சட்டப் பிரிவு, பயண முகவர்கள், பயணிகள் போன்றவர்கள் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் இன்று (அக்.1) தீர்ப்பை அறிவித்துள்ளது.

மார்ச் 25 முதல் மே 24 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் அதே காலகட்டத்தில் (உள்நாட்டு மற்றும் சர்வதேச) பயணத்திற்காக விமான நிறுவனங்கள் மூன்று வாரங்களுக்குள் மற்றும் எந்த ரத்து கட்டணமும் இன்றி தொகை திருப்பி தரப்படும்.

மே 24 க்குப் பிறகு பயணம் செய்வதற்கான எந்த நேரத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, பணத்தைத் திரும்பப் பெறுவது சிவில் ஏவியேஷன் (CAR) ஆல் நிர்வகிக்கப்படும். மற்ற எல்லா நிகழ்வுகளிலும் 15 நாள்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

நிதி நெருக்கடி ஏற்பட்டால், 2021 மார்ச் 31 வரை செல்லுபடியாகும் பயணிகளுக்கு கிரெடிட் ஷெல் வழங்கப்பட வேண்டும், இது எந்த வழிக்கும் பயன்படுத்தப்படலாம்.

அதாவது, கிரெடிட் ஷெல் மாற்றத்தக்கதாக இருக்கும். மேலும் இது 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்படுத்தப்படாவிட்டால், விமான நிறுவனங்கள் அந்தத் தொகையைத் திருப்பித் தர வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து 2020 ஜூன் 30 வரை பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கிரெடிட் ஷெல் வழக்கில் ஒவ்வொரு மாதமும் 0.5% வட்டி வழங்கப்படும். அதன்பிறகு, இது 2021 மார்ச் 31 வரை 0.75% உயர்த்தப்படும்.

இதையும் படிங்க: சென்னை - கொல்கத்தா விமான சேவை தொடக்கம்: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details