கரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், இதற்கான மருந்தை கண்டுபிடிக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர். மருந்து ஏற்படுத்தும் பின் விளைவுகளை அறிந்து கொள்வதற்கு, விலங்குகளின் மீது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சில விஞ்ஞானிகள், தங்கள் உயிரினை துச்சமென மதித்து அவர்களையே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களை அறிந்து கொள்வோம்.
மஞ்சள் காய்ச்சலுக்கு உயிரை தியாகம் செய்தவர்
1881ஆம் ஆண்டு, மஞ்சள் காய்ச்சலுக்கு காரணம் கொசுக்கள் கடிப்பதுதான் என மருத்துவர் கார்லஸ் கண்டுபிடித்தார். இதனை உறுதிபடுத்திக் கொள்தவற்காக அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கு தங்களை த் தாங்களே உட்படுத்திக் கொண்டனர். 1900களில், விஞ்ஞானி வால்டர் ரீட் தலைமையில் ஜேம்ஸ் கரோல், அரிஸ்டைட்ஸ் அக்ரமோன்டி, ஜேஸ்ஸி வில்லியம் லேசர் ஆகிய மருத்துவர்கள் மஞ்சள் காய்ச்சல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இறுதியாக, கரோல், லேசர் ஆகிய மருத்துவர்கள் தங்கள் மீது கொசுக்களை கடிக்க வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் இருவரும் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சில நாள்களிலேயே, லேசர் உயிரிழந்தார். கரோல் குணமடைந்தார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதே நோயால் அவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற அவர்கள் தங்களது உயிரினை தியாகம் செய்தனர்.
தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்
அக்காலத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து கொடுத்து முழு உடலையும் செயலிழக்க செய்வர். முழு உடலையும் செயலிழக்க வைப்பது தேவையில்லாத ஒன்று என சிறந்த மருத்துவர் ஒருவர் நிரூபணம் செய்தார். ஆம், அமெரிக்கா பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஓ நீல் கேன் என்ற மருத்துவர் அறுவை சிகிச்சையின் செயல்முறைகளை சீர்திருத்த விரும்பினார். நோய் பாதிக்கப்பட்ட விரல்களை மட்டும் செயலிழக்க செய்துவிட்டு தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 1921ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி மயக்க மருந்து கொடுத்து வயிற்றை செயலிழக்க வைத்து குடல் வாலை தானே நீக்கிக் கொண்டார். அப்போது அவருக்கு 60 வயது. பத்து ஆண்டுகள் கழித்து, தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டு 36 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள முழு உடலையும் செயலிழக்க வைக்க தேவையில்லை என இவர் உலகை நம்பவைத்தார்.
வயதானவர்களை இளையவராக மாற்ற ஒரு முயற்சி