கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக் பாக்பாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “காஷ்மீர் ஆளுநர்கள் மது அருந்திவிட்டு கோல்ப் ஆடுவார்கள். பொதுவாக ஆளுநர்களுக்கு வேலைகள் எதுவுமில்லை.
மற்ற மாநில ஆளுநர்கள் சச்சரவிலிருந்து விலகியிருப்பார்கள்” என்று பேசியதாக தெரிகிறது.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், “ஆளுநர்கள் மது அருந்திவிட்டு கோல்ப் ஆடுவார்கள் என்ற கருத்தின் மூலம் ஆளுநர் பதவிக்கும் ஆளுநர் மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.