தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும்' - சஞ்சய் ராவத் - சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Sanjay Raut

By

Published : Nov 21, 2019, 1:13 PM IST

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 'காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது.

அடுத்த இரண்டு நாட்களில் புதிய அரசை நிறுவுவதை நோக்கி முன்னேறுவோம். முதலமைச்சர் சிவசேனாவைச் சேர்ந்தவராக இருப்பார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே - சோனியா காந்தி - சரத் பவார்

முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில், ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக்கோரி சிவசேனா பிடிவாதம் செய்துவந்தது. இந்த கோரிக்கையை தொடர்ந்து பாஜக நிராகரித்து வந்ததால், கோபமடைந்து பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது.

சிவசேனா - பாஜக

தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. ஆளுநர் ஒதுக்கிய கால இடைவெளியில் எந்தக்கட்சியும் ஆட்சியமைக்காத நிலையில், தொடர் இழுபறிக்கு பின்னர் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்... மோடியை சந்திக்கிறார் சரத்பவார்

ABOUT THE AUTHOR

...view details