தமிழ்நாடு

tamil nadu

அடல் சுரங்கம் அமைக்க 9000 டன் இரும்பு - செயில் நிறுவனத்திற்கு அமைச்சர் பாராட்டு

By

Published : Oct 3, 2020, 10:55 AM IST

உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதை அமைக்க சுமார் 9 ஆயிரம் டன் உருக்கு (இரும்பு) அளித்த செயில் நிறுவனத்திற்கு மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

SAIL
SAIL

இமாச்சல் மாநிலம் ரோஹ்தாங்கில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.3) திறந்துவைத்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதை உருவாக்க ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் செயில்(SAIL) நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

இந்த சுரங்கப் பாதை உருவாக சுமார் 15 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட உருக்கு(இரும்பு) தேவைப்பட்ட நிலையில் அதில் சுமார் 9 ஆயிரம் டன் உருக்கை செயில் நிறுவனம் வழங்கியுள்ளது. செயில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டை மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்நிறுவனத் தலைவர் அனில் குமார் கூறுகையில், நாட்டின் முக்கிய திட்டத்திற்கு தங்கள் நிறுவனம் பங்காற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அனைத்து வகையிலும் பங்களிப்பு மேற்கொள்ள செயில் நிறுவனம் தயாராகவுள்ளது எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:உலகில் மிக நீளமான சுரங்கப் பாதையின் சிறப்பு என்ன?

For All Latest Updates

TAGGED:

Atal tunnel

ABOUT THE AUTHOR

...view details