'மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராடினர். ஆனால், மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜக தொடர்ந்து இந்தத் தலைவர்களை சொந்தம் கொண்டாடிவருகிறது' என வரலாற்றாசிரியர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவேதான் அவர்கள் மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.