புதுச்சேரி நகரப்பகுதியில் வெங்கட்டா நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ள ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வந்த ஒருவர் தனது குடும்பத்தடன் டெல்லிக்கு சென்று உள்ள நிலையில், நேற்று( ஜூலை 21) அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தலைவர் ரெஜினாபேகம் உடனடியாக பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.