கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முகக்கவசமின்றி சாலையில் சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இச்சமயத்தில்தான் முகமூடியை அணிந்தபடி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைப் பிடிப்பது சவாலாக உள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளதால் ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. ஏடிஎம் பாதுகாப்பிற்கு காவலர் மட்டும் போதாது. முக்கியமாக, அலாரம் வசதியை மேம்படுத்த வேண்டும். ஏடிஎம்மில் கொள்ளை அடிக்கும் முயற்சி குறித்த தகவல்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குக் கிடைக்கும் வகையில் அலாரம் வடிவமைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.