தமிழ்நாடு

tamil nadu

கரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை!

By

Published : May 30, 2020, 4:46 PM IST

மும்பை: கரோனா வைரசால் (தீநுண்மி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருமாத குழந்தை தற்போது இத்தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Ray of hope! 36-day-old baby beats coronavirus, recovers successfully in Mumbai
Ray of hope! 36-day-old baby beats coronavirus, recovers successfully in Mumbai

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது தரப்பினரும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் கடந்த மே 13ஆம் தேதி சியான் மருத்துவமனையில் பிறந்த இரண்டு வாரமே ஆன நிலையில் ஆண் குழந்தை காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டது.

அப்போது பரிசோதனை மேற்கொண்டபோது அக்குழந்தைக்கு கரோனா தீநுண்மி இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலம் தேறியது மட்டுமின்றி கரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டது.

அப்போது அக்குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்த பின்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது குழந்தையை அரவணைத்தபடி நேற்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் கைகளைத் தட்டி ஆரவாரம் எழுப்பி உற்சாகத்துடன் வழி அனுப்பிவைத்தனர்.

பிறந்த 36 நாள்களான குழந்தை கரோனாவை வென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தாய்ப்பால் மட்டுமே குடித்து கரோனாவை வீழ்த்திய மூன்று மாதக் குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details