தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் - puducherry secretary office protest

புதுச்சேரி : நிலுவையில் உள்ள தங்களது ஊதியத்தை வழங்கக் கோரி ரேஷன் கடை ஊழியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

By

Published : Jun 16, 2020, 7:13 PM IST

புதுச்சேரியில் உள்ள 351 ரேஷன் கடைகளில் சுமார் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல கட்டப் போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று புதுச்சேரி தலைமைச் செயலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, ”நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க தலைமைச் செயலருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தலைமைச் செயலர் கோப்புகளில் கையெழுத்து போடாமல் கால தாமதம் செய்து வருகிறார்” எனத் தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :’புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ - நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details