ஆந்திராவில் ரேஷன் அட்டையில் இயேசு கிறிஸ்து உருவம் அச்சடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பு மக்கள் கண்டனங்களைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் ஆந்திர அரசு இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தனிநபரின் விளம்பரத்திற்காகப் பரப்பியுள்ள செயல் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாட்லமுரு கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், இயேசு கிறிஸ்துவின் உருவத்தை ரேஷன் அட்டையில் அச்சிட்டு வேண்டுமென்றே பரப்புரை செய்துள்ளார். இவர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல, தெலுங்கு தேச கட்சியின் தீவிர ரசிகர் ஆவார்.