கூகுல் மற்றும் ஆப்பில் இணையதளத்தில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை காவல்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரேபிடோ சேவை தொடர்ந்து செயல்படுவதில் எந்த தடையும் இல்லை.
மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்படாததால், கூகுள் மற்றும் ஆப்பிள் இணையதள சேவையில் இருந்து நீக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.
காவல்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிகளை உருவாக்கும் வரை, ரேபிடோ வை அனுமதிக்க முடியாது எனக்கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.