ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த என்.பாஸ்கர ராவ், பின்னர் அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார். 1978 ல் சென்னா ரெட்டியின் அமைச்சரவையில் இடம்பெற்றார். 1982ல் என்.டி ராமா ராவுடன் இணைந்து தெலுங்கு தேச கட்சியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். அக்கட்சி 1983யில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த என்.டி ராமராவ் அமைச்சரவையில் என். பாஸ்கர ராவ் நிதியமைச்சர் ஆனார். ஒன்றரை வருடத்திற்குப் பிறகு என்.டி. ராமாராவ், ஆஞ்சியோ கிராம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற பிறகு தெலுங்கு தேச கட்சியை வழி நடத்தினார்.
மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் உதவியால் 1984ல் ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாஜக உட்பட 17 எதிர்க் கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சிகிச்சை முடித்துத் திரும்பிய என்.டி ராமாராவ் முதலமைச்சர் பதவி பறிபோனதைக் கண்டு அதிர்ந்து போனார்.