புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் முக்கியமானது மும்மொழி கொள்கை. இதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், அதை மீறி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
1986இன் கல்விக் கொள்கைக்கு மாற்றாக "புதிய கல்விக் கொள்கை 2020" அமல்படுத்தப்படுகிறது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவது குறித்து மறுஆய்வு செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.