உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுமானம் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அறக்கடளையின் அறங்காவலரான மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமையேற்று நடத்தினார்.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த பராசரன், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்றும் மூன்றாண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் தெரிவித்தார்.