அதிமுக எம்பிக்கள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு - Rajya sabha adjourned
டெல்லி: அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுளளது.

rajya-sabha
மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் அஞ்சல் துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவான்ஷ் நாராயண் சிங் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.