உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் என்கவுண்டர் வழக்கில் காவல் துறையை சேர்ந்த எட்டு பேர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில், தார்மீக ரீதியில் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் யோதி ஆதித்யநாத் பதவி விலக வேணடும் என சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் காவல் துறையினர், அரசியல்வாதிகள் என பல முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கினை மேற்படி விசாரணை செய்ய சிபிஜயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.