தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தான் தொழிற்சாலைகளில் 8 மணி நேரம் பணி - பணி நேரம் மாற்றம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்
தொழிலாளர்

By

Published : May 26, 2020, 5:53 PM IST

குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் படி திருத்தி அமைத்தது. அதன்படி, 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களின் கூடுதல் வேலை நேரங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு வேலை நேரம் 12 மணி நேரமாக அமலில் இருக்கும் என ஏப்ரல் 24இல் அறிவித்திருந்தது. கரோனாவின் நெருக்கடியை கட்டுப்படுத்த ’குறைந்த தொழிலாளர்கள்- அதிக நேர வேலை’ என்ற முறையை அமல்படுத்தியது.

இது குறித்து அம்மாநில தொழிலாளர் அமைச்சர் திகாராம் ஜூலி (Tikaram Jully ), ”தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக திருத்தி முதலமைச்சர் அசோக் கெலட் மறு உத்தரவிட்டுள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் அரசு வாகனங்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு அனுமதி பாஸ் காட்டுவதில் தளர்வு அளிக்கப்படும். தொழிற்சாலைகள் கரோனா விதிமுறைகள் படி செயல்படுவது அவசியம்” என்றார்.

இதையும் படிங்க: குற்றவாளிகளின் பரோல் காலத்தை நீட்டித்த உபி அரசு

ABOUT THE AUTHOR

...view details