தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடும் ராஜஸ்தான் சபாநாயகர் - அதிருப்தி உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

ஜெய்பூர்: சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக ராஜஸ்தான் மாநில சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Rajasthan Politics
Rajasthan Politics

By

Published : Jul 22, 2020, 11:58 AM IST

ராஜஸ்தான் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், அவரது ஆதாரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரியதியடுத்து, அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 24 ஆம் தேதிவரை உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தனது வழக்கறிஞர்களுடன் சபாநாயகர் சி.பி. ஜோஷி சட்டபேரவையில் அவசர ஆலோனை மேற்கொண்டுள்ளார். மேலும், அவர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ராஜஸ்தானின் கூவத்தூராக மாறிய ஜெய்ப்பூர் உல்லாச விடுதி!

ABOUT THE AUTHOR

...view details