தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2020, 11:52 PM IST

ETV Bharat / bharat

சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ராஜஸ்தான் திட்டம்?

ஜெய்ப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுவருகிறது.

SC
SC

கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மாநில சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ராஜஸ்தான் அரசும் வழக்கு தொடர திட்டமிட்டுவருகிறது.

இதுகுறித்த மனுவை ராஜஸ்தான் அரசு மார்ச் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. இச்சட்டத்திற்கு ஏதிராக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் கெலாட் கோரிக்கை விடுத்திருந்தார்.

மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வழி செய்வதே குடியுரிமை திருத்தச் சட்டமாகும்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details