தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டப்படிப்பு, முதுகலை தேர்வுகளை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு - தேர்வை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): 2019-20ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான பட்டப்படிப்பு, முதுகலை தேர்வுகளை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

rajasthan-govt-cancels-ug-slash-pg-exams-amid-covid-students-to-be-directly-promoted
rajasthan-govt-cancels-ug-slash-pg-exams-amid-covid-students-to-be-directly-promoted

By

Published : Jul 5, 2020, 4:21 PM IST

கோவிட் -19 தொற்று எதிரொலியாக 2019-20ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான அனைத்து பட்டப்படிப்பு, முதுகலை தேர்வை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தேர்வின்றி அடுத்தாண்டு கல்வியை தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

"மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) வழங்கும் வழிகாட்டுதல்களை ஆராய்ந்த பின்னர் மாணவர்களின் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் செயல்முறை மற்றும் அடுத்த வகுப்பிற்கு பதவி உயர்வு ஆகியவை முடிவு செய்யப்படும்" என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 28, 30ஆம் தேதிகளில் 10ஆம் வகுப்புக்கான மீதமுள்ள வாரியத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கரோனா பரவல் காரணமாக சில தினங்களுக்கு முன் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறித்து குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் தேர்வு மையங்களில் சாதகமான வழக்குகள் எதுவும் இல்லை என்ற உயர் நீதிமன்றம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியது.

ABOUT THE AUTHOR

...view details