கோவிட் -19 தொற்று எதிரொலியாக 2019-20ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான அனைத்து பட்டப்படிப்பு, முதுகலை தேர்வை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தேர்வின்றி அடுத்தாண்டு கல்வியை தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
"மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) வழங்கும் வழிகாட்டுதல்களை ஆராய்ந்த பின்னர் மாணவர்களின் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் செயல்முறை மற்றும் அடுத்த வகுப்பிற்கு பதவி உயர்வு ஆகியவை முடிவு செய்யப்படும்" என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 28, 30ஆம் தேதிகளில் 10ஆம் வகுப்புக்கான மீதமுள்ள வாரியத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.