ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்கள் பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளி தாக்கி அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். இந்தாண்டு மே மாதம் அப்பகுதிக்கு வந்த வெட்டுக்கிளிகள் தொடர்ந்து பெருகி தற்போது பயிரை நாசம் செய்கின்றன.
வெட்டுக்கிளிகள் விவகாரம்: பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட பிரதமருக்கு கெலாட் கடிதம் - ராஜஸ்தான் வெட்டுக்கிளிகள்
ஜெய்ப்பூர்: வெட்டுக்கிளிகள் தாக்கத்திலிருந்து பயிர்களை காக்கும் விதமாக பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

Rajasthan CM urges PM Modi to coordinate with Pakistan to control locust menace
குளிர்காலமான டிசம்பரில் அதன் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட்