ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில், ஒரு கர்ப்பிணி பெண் தனது சகோதரி உறவான பெண்ணோடு, தன் கணவர் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து கணவரை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கணவனை கோடாரியால் கொன்ற கர்ப்பிணி மனைவி! - Tamil latest news
ஜெய்பூர்: ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
![கணவனை கோடாரியால் கொன்ற கர்ப்பிணி மனைவி! Wife killed husband](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:27-7455534-rajasthan.jpg)
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் சரோஜ், தனது கணவர் மகாவீர் பாலாய்யின் உடலை நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் பின்புறத்தில் கொலை செய்து புதைத்துள்ளார். அதன்பின் ஒரு நாள் கழித்து, அவர் உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாலாய்யின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து அவரது குடும்பத்திடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரோஜ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.