தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் மாளிகையை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறதா மம்தா அரசு! - மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர்

கொல்கத்தா : மேற்கு வங்க ஆளுநர் மாளிகையின் மாண்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் ராஜ் பவன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜகதீப் தங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகையை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறதா மம்தா அரசு!
ஆளுநர் மாளிகையை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறதா மம்தா அரசு!

By

Published : Aug 16, 2020, 7:14 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர், "நாட்டின் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதம் நீடிக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் வேட்டையாடப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. மேற்கு வங்க ஆளுநர் மாளிகையான ராஜ் பவன், அரசின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. இது ராஜ் பவனின் மாண்பை குறைத்து மதிப்பிடும் செயல். அதன் மாண்மை பாதுகாக்க நான் செய்யத் தேவையான எல்லாவற்றையும் செய்வேன்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details