தமிழ்நாடு

tamil nadu

வெள்ளத்தில் மிதந்த தெலங்கானா; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

By

Published : Oct 14, 2020, 6:50 AM IST

தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், ஹைதராபாத்தின் நகரெங்கிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

Rain continues in Hyderabad IMD issues orange warning Incessant rain in Hyderabad Greater Hyderabad Municipal Corporation ஹைதராபாத்தில் கன மழை தெலங்கானாவில் கனமழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Rain continues in Hyderabad IMD issues orange warning Incessant rain in Hyderabad Greater Hyderabad Municipal Corporation ஹைதராபாத்தில் கன மழை தெலங்கானாவில் கனமழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை (அக்.13) தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக ஹைதராபாத் நகர் வெள்ளத்தில் தத்தளித்தது.

சாலையெங்கிலும் மழை நீர், ஆற்று நீர் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி நத்தை போல் ஊர்ந்து கொண்டே சென்றனர். பல்வேறு இடங்களில் பெருமழை காரணமாக நகர்ப்பகுதி துண்டிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, யாத்கிரி- போங்கீர் மாவட்டத்தில் உள்ள வெர்கட் பல்லே பகுதியில் 243.8 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மெட்சால் மல்காஹ்கிரி மாவட்டத்தில் உள்ள சிங்கபூர் நகரில் 210.8 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது.

வெள்ளத்தில் மிதந்த தெலங்கானா; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

ஹைதராபாத் மாநகராட்சியை பொறுத்தவரை 64.4 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது. அந்த வகையில், பசுமமுல்லா மற்றும் அப்துல்லாபூரில் 11.5 மீ.மீ. மழையும், ஹயாத்நகர் மற்றும் இப்ராகிம்பட்டணம் ஆகிய பகுதிகளில் முறையே 6.5, 12.6 மீ.மீ. மழையும் பெய்தது.

இந்நிலையில் இன்றும் (அக்.14) கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தொடர் மழையினால் உருவான புதிய அருவி!

ABOUT THE AUTHOR

...view details