தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏப்ரல் 14வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்! - ரயில் சேவை நிறுத்தம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ஏப்ரல் 14ஆம் தேதிவரை ரத்து செய்துள்ளது.

ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!
ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!

By

Published : Mar 25, 2020, 10:14 AM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைராஸால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், மக்களின் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் மட்டும் இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனாவால் மதுரையில் ஒருவர் உயிரிழப்பு! அதன் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details