தமிழ்நாடு

tamil nadu

வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப்பில் சரக்கு ரயில்கள் சேவை பாதிப்பு!

By

Published : Oct 26, 2020, 3:46 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லும் சரக்கு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

railways-halt-freight-services-in-punjab
railways-halt-freight-services-in-punjab

நடந்து முடிந்து மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு சார்பாக மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வேளாண் மசோதாக்களைக் கைவிடும்படி பஞ்சாப்பில் விவசாயிகள் சார்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் முன்னெடுத்து வரும் ரயில் மறியல் போராட்டத்தால் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு ரயில்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத சூழல் நிலவியுள்ளது.

இதனால் பஞ்சாப் மாநிலத்தில் சரக்கு ரயில் சேவைகளை அனுப்ப வேண்டாம் என ரயில்வே துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் உரம், நிலக்கரி, உணவு பொருள்கள், மற்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் என தெரிகிறது.

அதேபோல் விவசாயிகளின் போராட்டம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் சரக்கு ரயில்களின் சேவையை தொடங்குவதற்கு இப்போது எண்ணமில்லை என வடக்கு ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், '' சரக்கு ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பொருள்களை திட்டமிட்ட நேரத்தில் கொண்டு செல்வது கடினம். இதனால் சிமெண்ட், உரம், உணவு பொருள்கள் ஆகியவை கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது'' என்றார்.

பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 சரக்கு ரயில்களை வடக்கு ரயில்வே இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு காங்கிரஸ் மரியாதையும், வாய்ப்புகளையும் அளித்தது”- திக்விஜய விங்

ABOUT THE AUTHOR

...view details