இதுதொடர்பாக கிழக்கு ரயில்வே கொல்கத்தா உயர் நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்த அறிக்கையில், " குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த கலவரத்தில் இந்திய ரயில்வேக்கு ரூ. 72.2 கோடி அளவிற்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சீல்தா பிரிவில் ரூ. 46 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மால்தா பிரிவில் கிட்டத்தட்ட ரூ. 24.5 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
அதேபோன்று தென் கிழக்கு ரயில்வே சமர்ப்பித்திருந்த மற்றொரு அறிக்கையில், ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளம்
என ரூ. 12.75 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.