காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, சமையல் கியாஸ் விலை உயர்வுக்காக பாஜக மகளிரணி நடத்திய போராட்ட புகைப்படம் அது. அதில் ஸ்மிருதி இரானியும் உள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பற்றி, ராகுல் காந்தி கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், 'சமையல் கியாஸ் விலை தற்போது ரூ.144.50 காசுகள் உயர்ந்துள்ளது. எப்போது போராடப் போகிறீர்கள்' எனவும் ராகுல் கேள்வியெழுப்புள்ளார்.