பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாடப் போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ள ட்வீட்டில், “இந்தியாவிலிருந்து சீனர்கள் என்று வெளியேறுவார்கள் என்பதை முதலில் கூறுங்கள்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னதாக இந்திய- சீன இராணுவ வீரர்களுக்கு இடையே கிழக்கு லடாக்கில் நடந்த வன்முறையில் தமிழ்நாட்டு வீரர் உள்பட 20 ராணுவ வீரர்கள் வீரமரணடைந்தனர். தொடர்ந்து சீனர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்கள் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தன.