தமிழ்நாடு

tamil nadu

ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி

By

Published : Oct 3, 2020, 4:09 PM IST

Updated : Oct 3, 2020, 5:28 PM IST

Rahul
Rahul

16:06 October 03

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உயிரிழந்த பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு அம்மாநில காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருவரின் வருகையை ஒட்டி ஹத்ராஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக ஹத்ராசில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று சென்றனர்.

அப்போது உத்தரப் பிரதேச மாநில எல்லையிலேயே அவர்களது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, அம்மாநில காவல்துறை இவருரையும் தடுப்பு காவலில் வைத்து டெல்லி திருப்பி அனுப்பியது.

இதையடுத்து இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.பிகள், முக்கிய உறுப்பினர்கள் புடைசூழ ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மீண்டும் ஹத்ராஸிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: வாக்குகளுக்காக அல்ல; நாட்டிற்காகவே வளர்ச்சித் திட்டங்கள்-பிரதமர் நரேந்திர மோடி

Last Updated : Oct 3, 2020, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details